அச்சுவேலி கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் விஜயம்!

 

 அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழிற்பேட்டைக்கான இணைப்புச் செயலகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்.
 
அச்சுவேலி பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு புதிய செயலகத்தை பார்வையிட்டதுடன்,இந்திய அரசின் நிதியுதவியுடன் அப்பகுதியில் அமையப்பெறவுள்ள கைத்தொழிற்பேட்டை குறித்தும்; துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
 
அத்துடன் அப்பகுதியில் கைத்தொழிற்பேட்டை சூழவுள்ள பகுதியில் எல்லையை நிர்ணயித்து சுற்றுவேலிகள் அமைப்பது மற்றும், வீதிகளை செப்பனிடுவது தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்.
 
இதன்போது வலிகிழக்கு பிரதேச செயலர் பிரதீபன், கைத்தொழில் அபிவிருத்தி சபை பணிப்பாளர் கெங்காதரன், ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன், ஈ.பி.டி.பியின் அச்சுவேலி பிரதேச இணைப்பாளர் தர்மராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
Thanks 4u epdpnews.com