அதிவேக பயணம் இரு பிள்ளைகளின் தாயின் உயிரை பறித்த பரிதாபம்

ஹம்பாந்தோட்டை, உடமளல பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளடேு மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

வேகமாக பயணித்த ஜீப் வண்டி வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது. 

நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 26 வயதான வஇரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். 

விபத்து இடம்பெறும்போது ஜீப் வண்டியினுள் ஆண்கள் நால்வரும் சிறுவர்கள் இருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இவர்களில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.