அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில், மர்மமனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 6 பெண்கள் பலியாயினர்.
பொலிசாரின் துரித நடவடிக்கையால் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவனுடன் இருந்த மற்றொருவனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான், அதிபர் ஒபாமா பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.