அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இன்று மீண்டும் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை- கண்டி வீதியில் 69 ஆவது மைல்கல்லுக்கு அருகிலுள்ள தற்காலிக பாலம் பூமி அதிர்வு காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் அம்பாறை மாவட்டத்தில் பூமியதிர்வுகள் உணரப்பட்டன.அதற்கு மனித செயற்பாடுகளே காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பூமியதிர்வை கண்டறிவதற்கான சாதனங்களை குறித்த பகுதியில் பொருத்திவிட்டு சென்ற போதிலும் உண்மையான காரணத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியமுடியவில்லை.