அரச ஊழியர்கள் இன்று உரிய நேரத்திற்கு முன் வீடு செல்லலாம்

அரச ஊழியர்கள் தமது வேலைதளங்களிலிருந்து உரிய நேரத்திற்கு முன்னதாக இன்று (08) வீடு திரும்ப முடியும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். 

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக பயணிகள் பலரும் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் அரச ஊழியர்கள் போக்குவரத்து சௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதனை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் தமது திணைக்களம், நிறுவன முகாமையாளர்களிடம் அனுமதி பெற்று வேலை நிறைவு நேரத்திற்கு முன்னதாக வீடு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.