யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் க. பொ. த உயர் தர தமிழ் பாடத்துக்கு மிகவும் பிரபல ஆசிரியரின் 16 வயது மகள் ஆருனியா நேற்று மாலை 3.30 மணி அளவில் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார்.
குறித்த ஆசிரியரின் வீடு அரியாலை மேற்கில் ஆசிர்வாதப்பர் வீதியில் உள்ளது.
ஆருனியா நேற்று பாடசாலை சென்று இருக்கவில்லை. சம்பவத்துக்கு முந்திய சில மணித்தியாலங்களாக அடிக்கடி கேற்றை பார்த்துக் கொண்டு நின்றிருக்கின்றார். அங்கும், இங்கும் நடமாடி உள்ளார்.
வீட்டுக்கு அருகில் வாகனம் தரித்து நிற்கின்ற சத்தம் கேட்டது.
காதலன் வந்து விட்டார் என்பதை அவதானித்தார்.
இவர் வீட்டுக்கு உள்ளே சென்று சிறிய பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு காதலனுடன் ஏறி புறப்பட்டு சென்று விட்டார்.
ஆயினும் இவர் ஓட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் வந்த இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விட்டார் என்றே இப்பகுதியில் பரவலாக வதந்தி உலாவியது.
இச்சம்பவம் தொடர்பாக தகப்பன் அருள்நேசன் பொலிஸில் முறைப்பாடு செய்து உள்ளார்.