சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 27 பேர் அம்பலாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பிரதேசங்களில் மறைந்திருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொட, மினுவங்கொட மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.