புத்தளம் தொடக்கம் காலி, அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கடற்பகுதிகளில் அதிகளவான மழை பெறக் கூடும் என அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி, பொத்துவில் கடற்பகுதிகளில் காற்று மணத்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சப்ரகமுவ, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.