இரணைமடுக் குளத்திலிருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குக் குடி நீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்

இரணைமடுக் குளத்திலிருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குக் குடி நீர் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்

இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு குடி நீர் வழங்குதல்
தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் 2013.10.19 ம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கிளி நொச்சி கரைச்சிப் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண முதலமைச்சர் க . வி விக்னேஸ்வரன் , வடக்கு மாகாண நீர்ப்பாசன விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் , அவைத்தலைவர் சீ.வி. கே சிவஞானம் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் . இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் , புத்திஜீவிகள் , சிவில் அமைப்புக்களையும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி . சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.