இரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவருதல் : இறுதி அறிக்கை இன்று கையளிப்பு

  இரணைமடு நீரை யாழிற்கு கொண்டுவருதல் : இறுதி அறிக்கை இன்று கையளிப்பு

இரணைமடு குளத்தின் நீரை யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய இடங்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கிறது. 

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சிவநாதன் தலைமையில் 15 பேர் கொண்ட நிபுணர் குழு இதற்காக முதலமைச்சரால் அமைக்கப்பட்டிருந்தது. இக் குழு தனது ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சரிடம் கையளிக்கவுள்ளது. 

இந்த அறிக்கையின் முடிவுகளின் படியே யாழ் மாவடட்த்திற்கு நீர் வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானம்எடுக்கப்படவுள்ளது. எனினும் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டுச் செல்லும் திட்டத்திற்கு ஒரு போதும் தாங்கள் இடமளிக்கப் போவதில்லை என இரணைமடு விவசாயிகள்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.