இரத்தம் சிந்திய திருடன்...

மட்டக்களப்பு மாவட்டத்தின்; காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு விசித்திர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரத்தம் சிந்தி திருட்டு நடத்திய சம்பவமே அது.

புதிய காத்தான்குடி விடுதி வீதி 6ஆம் ஒழுங்கையில், நேற்று இரவு வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் பெற்றரி திருடர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
 

திருட வந்த குறித்த திருடனின் காலில் இருந்து மிக அதிகமான இரத்தம் வெளியேறியுள்ளதை திருட்டு நடந்த இடத்திலிருந்து அவதானிக்க முடிந்தது.

இத்திருடன் நடமாடிய, எல்லா இடங்களிலும் அதிகமான இரத்தக்கறைகள் தென்படுகிறது. இரத்தத்தை சிந்தியே குறித்த திருடன் இத்திருட்டை மேற்கொண்டுள்ளமை தெரியவருகிறது.

இத்திருடனை கண்டு பிடிக்க காத்தான்குடிப் பொலிசாரினால் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.