இலங்கையின் பாரிய அபிவிருத்தியின் மைல்க்கல்லாக அமையும் தாமரை கோபுரம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க அலுவலக தொகுதி தகவல் தொலைத் தொடர்பு கோபுரம் ஆகியவற்றின் நிர்மாண பணிகளை எதிர்வரும் 20 மாதங்களில் நிறைவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உத்தேச தாமரை கோபுர கட்டிடத் தொகுதி கொழும்பு விஜேவர்த்தன மாவத்தையில் நிர்மாணிக்கப்படுகின்றது .
இதன் நிலத்துக்கடியிலான நிர்மாண பணிகளுக்கு 104.3 அமெரிக்க டாலர் மில்லியன் ரூபாசெலவிடப்படும் என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
நிலத்துக்கடியிலான நிர்மாண பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நிறைவு பெறுமெனவும் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
350 மீற்றர் உயரத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டமாகும். இதன் நிர்மாண பணிகளுக்காக சீன அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குகிறது.