இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அமெரிக்க அரசாங்கம் உதவி

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அதன் அபிவிருத்திக்கரமான சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உதவும் வகையில் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்றை இன்று (16) அறிவித்துள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பத்தம் கைச்சாத்திடப்பட்டதனூடாக சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்படும் ´சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்கான சிவில் சமூக முன்முயற்சிகள்´ எனத் தலைப்பிடப்பட்ட திட்டத்திற்கு ´யுஎஸ்எயிட்´ அனுசரணை அளிக்கவுள்ளது. 

இந்த மூன்று வருடகால நிகழ்ச்சித்திட்டம், இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கங்களுக்கு இடையிலான உறவை மேலும் மேம்படுத்த வழிகோலும். 

இந்த நிகழ்ச்சித்திட்டமானது தொழில்சார் மட்டத்திலான சட்டக்கல்வி மற்றும் நீதித்துறை மட்டத்திலான கல்வியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் சட்ட உதவி சேவைகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆய்வு மற்றும் வாதிடல் வகிபாகத்தை பலப்படுத்துவதற்கும் உதவியாக அமையும். 

´இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற இலங்கை நீதித்துறையின் முக்கிய பங்காளருக்கு உதவக்கிடைத்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துகின்ற, சட்டத்தின் ஆட்சிக்கு உதவுகின்ற மற்றும் சுயாதீன நீதித்துறையை ஊக்குவிக்கின்ற சிவில் சமூகத்துடனான நீண்டகால இணைச்செயற்பாட்டை தொடர்வதில் நாம் பெருமையடைகின்றோம். 

இந்த வகையில் இலங்கையில்; நீதித்துறையின்; செயற்திறனை மேம்படுத்துவதிலும் நீதியை நிர்வகிப்பதிலும் நாம் மேலும் உதவ முடியும்.´ என கைச்சாத்திடல் நிகழ்ச்சியின் போது அமெரிக்க தூதுவர் மிஸேல் சிஸன் தெரிவித்தார். 

இதற்கு மேலாக இந்த மானியத்தின் ஊடாக சட்ட நூலகப்மொன்றை சீரமைக்கவும், சட்டத்தரணிகள் சங்க கேட்போர் கூடத்தை புதுப்பிப்பதற்கும் மற்றும் 2014 பெப்ரவரி மாதத்தில் தொழில் சட்டம் குறித்த கருத்தரங்கொன்றை ஏற்பாடுசெய்வதற்கும் உதவியளிக்கப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.