இளமைக்கால காதல் குறித்து மனம் திறந்து பேசிய தனுஷ்

தமிழ் சினிமா ரசிகர்களை நீண்ட காலமாக தனது இசையால் தாலாட்டி கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. 

அந்த வகையில் அவரது இசை தான் எனக்கு தாலாட்டு என்கிறார் நடிகர் தனுஷ். நான் இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். 

என் இளமை காலங்களில் அவரது இசை தான் எனக்கு முதல் காதலாக இருந்தது. 

முதல் முத்தம், முதல் தோல்வி, முதல் வெற்றி, இப்படி எல்லாவற்றிலுமே, உணர்வு ரீதியாக அவரது இசை என்னுள் கலந்துள்ளது என்கிறார். 

நான் நடிக்கும் படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தாலும், நான் என்றென்றைக்கும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று கூறுகிறார். 

மேலும் அவர் கூறுகையில், இளையராஜா என் ரத்தத்தில் கலந்து மாயம் செய்பவர் என்கிறார் தனுஷ்.