ஈபிள் டவருக்கு வெடி குண்டு மிரட்டல்

பாரிசில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவருக்கு, நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், சற்று நேரத்தில் அந்த மிரட்டல் போலியானது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர், பாரிசில் உள்ளது. இதை காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். 

இந்நிலையில், நேற்று திடீரென, ஈபிள் டவருக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். 

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

எனினும், இரண்டு மணிநேரத்திற்குப் பின், இந்த மிரட்டல் வெறும் வதந்தியே என தெரிந்தது. 

பின், சுற்றுலா பயணிகள், ஈபிள் டவரை காண மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.