உடுவில் தெற்கு ஈஞ்சடி வைரவர் ஆலயப் பகுதியில் உள்ள ஒரு வீடு தீயிட்டு நேற்று மதியம் எரிக்கப்பட்டதில் பல லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த தீபாவளித் திருநாளில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமையைத் தொடர்ந்து இந்த சம்பவம் பழிக்கு பழி வாங்கும் முகமாக இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீட்டில் இடம் பெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்காக வீடு கழுவுவதற்கு வசதியாக ஒரு அறையில் வீட்டுப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த வேளையில் குறிப்பிட்ட அறைக்கு தீயிடப்பட்டுள்ளது.