தமிழகத்தின் சிறுசேரி சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் இன்று அடையாளம் காட்டினர்.
கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். உமாமகேஸ்வரியின் செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றை கண்காணித்தபோது வடமாநில வாலிபர்கள் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கு வங்க வாலிபர்கள் உஜ்ஜவ் மண்டல், உத்தவ் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களை 7 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி அந்த 3 பேரையும் இன்று காலை 10 மணிக்கு சம்பவம் நடந்த சிறுசேரி சிப்காட் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு உமா மகேஸ்வரி நடந்து வந்தது, அவரை தாக்கி புதர் பகுதிக்கு இழுத்து சென்றது, கழுத்தை அறுத்தது, வயிற்றில் கத்தியால் குத்தியது போன்றவற்றை மூவரும் நடித்து காட்டினர்.
பலாத்காரம் செய்த இடம் மற்றும் மூவரும் தங்கி இருந்த இடம் ஆகியவற்றையும் அடையாளம் காட்டினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது
உமா மகேஸ்வரியை கொன்றது எப்படி? நடித்து காட்டிய குற்றவாளிகள்
