எச்சரிக்கை! மின்னல் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவும்

நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலையால் மின்னல் தாக்கம் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் தாக்கத்தால் அண்மையில் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதென அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்படை முகாம் சிப்பாய் ஒருவர் நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளை இந்த மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது.

பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கடற்படை சிப்பாயே உயிரிழந்தவராவார்.