ஏ-9 திறக்க கிளிநொச்சி வருகிறார் ஜனாதிபதி

ஏ-9 திறக்க கிளிநொச்சி வருகிறார் ஜனாதிபதி

எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஏ 9 வீதி புனரமைப்பு நிறைவடைந்து விட்டது. எனவே ஏ9 வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. 
 
இதனை ஒட்டியே ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.   இதன்போது கிளிநொச்சியில் மேலும் சில இடங்களையும் அவர் சென்று பார்வையிட உள்ளார் எனவும் தெரியவருகிறது.