பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 23 இராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் குண்டு வைத்து கொன்றனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.
அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பேச்சுவார்த்தை நாளை (3) இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. அதில், அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் சவுத்ரிநசீர் அலிகான் தலைமையிலும், தலிபான்கள் தரப்பில் மதகுரு சமியுல் தலைமையிலான குழுவும் பங்கேற்கின்றன.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வசதியாக தலிபான் தீவிரவாதிகள் ஒரு மாதம் போர்நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இந்த தகவலை தலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஷாகிதுல்லா ஷாகித் தெரிவித்துள்ளார்.
தலிபான்களின் இந்த நடவடிக்கையை சமாதான கமிட்டியின் அரசு ஒருங்கிணைப்பாளர் இர்பான் சித்திக் வரவேற்றுள்ளார். இதன்மூலம் பேச்சுவார்த்தை தடையின்றி நடைபெறும் வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளார்.
ஒரு மாத போர்நிறுத்தத்தை அறிவித்த தலிபான்கள்
