ஓரின சேர்க்கை இராணுவ வீரரை காப்பாற்றிய இளவரசர் ஹாரி

நேட்டோ படையில் இருந்த, ஒரினச் சேர்கையாளரான இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவரை தாக்க முற்பட்டவர்களிடம், இருந்து இளவரசர் ஹரி காப்பாற்றியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து இராணுவ வீரர் ஜேம்ஸ் வார்டன். இவர் ஓரின சேர்க்கையாளர். 

10 ஆண்டுகள் சேவைக்கு பின் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் தனது இராணுவ பணியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து கால்டு அவுட் இன் தி ஆர்மி என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். 

அதில் ஆப்கானிஸ்தானில் பாஸ்டியன் முகாமில் தங்கியிருந்தேன். எங்களுடன் இளவரசர் ஹாரியும் இருந்தார். இந்த நிலையில் ஓரின சேர்க்கையாளனாகிய என் மீது சில இராணுவ வீரர்கள் கடும் வெறுப்பில் இருந்தனர். 

சம்பவத்தன்று, ஆறு வீரர்கள் சேர்ந்து என்னை அடித்து உதைத்து கொலை செய்ய முயன்றனர். 

இதை பார்த்த இளவரசர் ஹாரி என்னை அவர்களிடம் இருந்து மன உறுதியுடன் காப்பாற்றினார். மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, என்னை தொடர்ந்து மிரட்டினாலோ ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

அன்று அவர் என்னை காப்பாற்றி இருக்காவிடில் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

இளவரசர் ஹாரியின் இந்த நடவடிக்கையை போஸ்னியாவில் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதியும், எம்.பி.யுமான பாப் ஸ்டீவர்ட் மற்றும் இங்கிலாந்து இராணுவ அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.