திருகோணமலை நிலாவெளி பகுதியில் கடல் அலையில் அல்லுண்டு செல்லப்பட்ட இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கடலில் நீராடச் சென்ற இருவரே கடலலையில் அல்லுண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குறித்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
இவர்கள் இருவரும் மஹியங்கனையில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்த குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.