யாழ். நகரில் பல்கிப் பெருகியுள்ள கட்டாய்காலி நாய்களை பிடித்து அகற்றுவதில் யாழ். மாநகரசபை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கட்டாய்காலி நாய் பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற பணியார்கள் நேற்று அதிகாலை முதல் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். யாழ். நகர மத்தியிலுள்ள ஆஸ்பத்திரி வீதி, பருத்தித்துறை வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நாய்க்கூண்டு வண்டிகளுடன் சென்ற பணியாளர்கள், குறுகிய நேரத்திலேயே பெருமளவு நாய்களைப் பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
பெரும்பாலும் பொதுமக்களின் குடியிருப்புக்கள் குறைவாகவே உள்ள பகுதிகளில் பெருமளவு நாய்கள் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை ஒருசில குடியிருப்பாளர்கள் மேற்படி தகவலறிந்ததும் தத்தமது வளர்ப்பு நாய்களைப் பாதுகாப்பதிலும் வீட்டினுள் கட்டிவைப்பதில் அவசரம் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.