யாழ். குடாநாட்டின் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக விசேடமாக பயிற்றப்பட்ட மோப்ப நாய்கள் மூன்று கொழும்பிலிருந்து இன்று வியாழக்கிழமை யாழ். பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இந்த மேப்பநாய்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழில் குற்றச் செயல்களைக் கண்டறிவதற்காக இந்த நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய நாட்டில் வளர்க்கப்பட்டு விசேட பொலிஸ் பயிற்சி பெற்ற நாய்கள் மூன்று யாழ்ப்பாயண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இதற்குரிய கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் குற்றச் செயல்களைக் கண்டறிவதற்காக இந்த நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய நாட்டில் வளர்க்கப்பட்டு விசேட பொலிஸ் பயிற்சி பெற்ற நாய்கள் மூன்று யாழ்ப்பாயண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இதற்குரிய கூடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.