இலங்கையில் முதல் தடவையாக கழிப்பறை வசதிகளுடனான அதி சொகுசு பேரூந்து சேவையினை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சகல சொகுசு பேரூந்துகளின் தரம் பற்றிய சோதனையினை நடாத்தி ஒருவார காலத்திற்குள் அது பற்றிய அறிக்கைகளை பெற்றுத் தருமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.வி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.