கியூபாவின், ஜனாதிபதியாக ரவுல் கேஸ்ட்ரோ (81) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு இவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான, பிடல் கேஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ரவுல் கேஸ்ட்ரோ, அதன் பின்னர் 2008ல் முறைப்படி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் நிறைவடைந்துள்ளதையொட்டி, இரண்டாவது முறை ஜனாதிபதியாக அவர் நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
கியூபாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு ஜனாதிபதி இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால் இதுவே ரவுல் கேஸ்ட்ரோவின் இறுதி பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
டயஸ்-கனெல் (53) துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.