கே.கே.எஸ். வீதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வீதி விபத்துக்களால் குறித்த வீதியில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம் கொள்ளும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கொக்குவிலிற்கும் தெல்லிப்பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தொடர்ந்து தினமும் இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
கே.கே.எஸ். வீதி முழுமையாக காப்பெற் இடப்பட்ட நிலையில் வீதி ஓரங்கள் உரிய முறையில் செப்பனிடப்பட்டு முடிவுறாத நிலையிலும், வடிகால்கள் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாலும் வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் கற்கள் குவிக்கப்பட்டிருப்பதுமே இவ்விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்குரிய முக்கிய காரணம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உரிய தரப்பினர் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவ்விபத்துக்கள் தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது