க.தம்பிராசா ஐந்து கோரிக்கை களை முன்வைத்து உண்ணாவிரதப்போராட்டம்

வடக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட க.தம்பிராசா வலி.வடக்கு மீள் குடியேற்றம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட் ஐந்து கோரிக்கை களை முன்வைத்து

இரண்டு நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார்.

யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 6.45 மணியளவில் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தம்பிராசா ஆரம்பித்துள்ளார்.

யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் பல முன்பங்களை அனுபவித்து கொண்டு வாழந்து வரும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்.உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தினரால் தமிழ்மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்தக்கோரியும்.

யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும்.

 விசாரணைகளின்று தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்.

போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தலைவர்களை இழந்த நிலையில் வாடும் குடும்பங்களுக்கு உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் .

யுத்தத்தினால் அங்க வீனர்களாக்கப்பட்டவரக்ளுக்கு அரசாங்கம் போதியளவு உதவிகளை வழங்க போன்ற ஐந்து கோரிகைகளை முன்னிலைப்படுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தம்பிராசா  ஆரம்பித்துள்ளார்.

வலிவடக்கு மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல கோரிக்கை களை முன்வைத்து எதிர்வரும் 12 ஆம் திகதி  மாவிட்ட புரத்தில் தொடர் உண்ணாவிரதப்போரட்ட்ம் நடைபெறவுள்ள தாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்பிராசா திடீரென இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.