சந்தேகநபரை கைது செய்யச் சென்ற கான்ஸ்டபிளுக்கு கத்திக்குத்து!

ஹெரோயின் வியாபாரி ஒருவரை கைது செய்யச் சென்ற வேளை, அவருடன் இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு இலக்கான பலாங்கொட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பலாங்கொட - தெஹிகஸ்தலாவ பகுதியில் இருந்த குறித்த சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் குழுவொன்று இன்று (08) அங்கு சென்றுள்ளது. 

அப்போது சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை மடக்கிப் பிடித்த நிலையில் சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கான்ஸ்டபிளை குத்தியுள்ளார். 

அதன்போது காயமடைந்த கான்ஸ்டபிள் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் 2 கிராம் 28 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்