சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (07) அதிகாலை 1.45 அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை விடுதிக்குச் சென்ற சிலர் மாணவர்கள் இருவரையும் வெளியில் வருமாறு அழைத்து தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் பம்பகின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து மாணவர்களின் உறவினர்கள் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இவ்விரு மாணவர்களுக்கும் கடந்த சில நாட்களாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் அத தெரணவிடம் தெரிவித்தனர்.
சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்
