சிரிய இரட்டை தற்கொலை குண்டு தாக்குதலில் 14 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடந்த இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 

மர்ஜா சதுக்கத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புக்களில் மேலும் பலர் காயமடைந்ததாக அரசாங்கத்தினால் நடத்தப்படும் அல் இக்கம்பரியா தொலைக்காட்சி கூறியுள்ளது. 

இதே சதுக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து அலெப்போ நகரை மீளக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளில் அரச படைகள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது