சிறிலங்கா இராணுவ அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொலை!

சிறிலங்கா இராணுவ இரண்டாம் லெப்டினட் தர அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  சிறிலங்கா காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் காலி  அஹங்கம  தித்தகல்ல வீதியில் வயல் ஒன்றுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் கொல்லப்பட்டவரின் உடலில் இரத்தம் வெளியேறிய நிலையில் காயம் ஒன்று காணப்படுவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பனாகொட இராணுவ முகாமில் பணியாற்றி வந்த 24 வயதான சுரங்க ஜானக சம்பத் என்ற இராணுவ அதிகாரியே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளார். தனிப்பட்ட விரோதம் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் பற்றி அஹங்கம காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்