சிறுமி துஷ்பிரயோகம்; பக்கத்து வீட்டு தாத்தா மீது முறைப்பாடு

சிறுமி துஷ்பிரயோகம்; பக்கத்து வீட்டு தாத்தா மீது முறைப்பாடு
குருநகர்ப் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என பக்கத்து வீட்டு தாத்தா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
குருநகர்ப்பகுதியில் கடந்த சில நாட்களாக 5 வயது சிறுமி ஒருவரை 67 வயதைச் சேர்ந்த பக்கத்துவீட்டு தாத்தா ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். 
 
சிறுமி சம்பவத்தை தயாரிடம் கூறவே நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் தாயார் குறித்த நபர் மீது முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.