அமெரிக்கா, ரஷ்யாவுக்கு போட்டியாக விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சீனா, நிலவுக்கு ராக்கெட் மூலம் ரோபாட் வாகனம் ஒன்றை அனுப்பி அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த ராக்கெட் அடுத்த மாதம் இறுதியில் நிலவுக்கு ஏவப்படுகிறது. அந்த வாகனம் பற்றிய விவரங்களை இதுவரை சீனா வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது.
இந்த நிலையில் அந்த வாகனத்தின் மாதிரி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தங்க நிறத்தில் அது உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேல் சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது நிலவின் மேற்பரப்பில் தானாக ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்யும். மணிக்கு 200 மீட்டர் வேகத்தில் வாகனம் ஊர்ந்து செல்லும். மேலும் 30 டிகிரி கோண உயரத்தில் ஏறும் திறனும் இந்த வாகனத்துக்கு உண்டு என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பிய மறுநாளே சீனா இந்த வாகனத்தின் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.