சிங்கம் படத்தில், சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பே, கூண்டுல பார்த்திருப்பே என, ஒரு வசனம் வரும். அதே வசனத்தை, சற்று உல்டா செய்து, சிங்கம்-2 படத்தில், கதாநாயகி அனுஷ்காவை புகழும் வகையில் ஒரு வசனம் எழுதப்பட்டுள்ளதாம்.
படத்தில், இந்த வசனத்தை சந்தானம் பேசியுள்ளாராம். குதிரையை ஓடிப் பார்த்துருப்பே, ஆடிப் பார்த்திருப்பே, ஆனால், சுடிதாரில் பார்த்திருக்கியா என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளதாம்.
அனுஷ்காவின், உயரத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் புகழும் வகையில் தான், இந்த வசனம் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தன்னை புகழும் வகையிலான வசனம், இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதால், மகிழ்ச்சியில் இருக்கும் அனுஷ்கா, இந்த படத்தில், தன்னை விட, ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளால், வருத்தத்திலும் இருக்கிறாராம்.