ஜனாதிபதி சற்றுமுன் தென்னாபிரிக்காவிற்கு பயணமானார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் தென்னாபிரிக்கா நோக்கிப் பயணமாகியுள்ளதாக அவரது சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மறைந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி, சுதந்திர போராட்ட வீரர், கறுப்பின மக்களின் விடுதலைத் தலைவன் நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்ளும் நோக்கமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்கா சென்றுள்ளார். 

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியையில் பங்கேற்க அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்ட உலக நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது.