பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்குள் கொழும்பில் இடம்பெற்ற மூன்றாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பில் தொடர்ந்து தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதுகுறித்த தகவல்கள் வெளியாகின்றமை குறித்து போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.