யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தாரின் வர்த்தகத்துறை வீழ்ச்சி கண்டு வருகின்றதான தகவல்கள், எங்கள் பொருளாதார த்தில் பேரிடியை ஏற்படுத்தப் போகின்றதென்பதை சுட்டி நிற்கிறது.
பல்வேறு தொழில் முயற்சிகள் இருக்கின்ற போதிலும் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் நின்று கொண்டு, கடைகட்டுதல், கடை நடத்துதல் என்ற இரு தொழில் கலாசாரம் எங்கள் வர்த்தக முயற்சிகளுக்கு குந்தகமாக அமைந்து விட்டன. இதற்கு மேலாக எங்கள் வங்கிகள் வழங்கிய அதிகள வான கடன்கள், நிதி நிறுவனங்கள் கண்டபாட்டில்-தவணைக் கட்டண அடிப்படையில் கொடுத்த வாகனங்கள், இவற் றுக்கான வட்டி கள், கட்டிடத்திற்கான வாடகைகள் என எல்லாம் சேர்ந்து வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டவர்களை படு குழியில் தள்ளிவருகின்றது.
ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு கடன் அடிப்படையில் வாகனங்களைக் கொடுத்த நிதிநிறுவனங்கள் கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்கின்ற நடைமுறை இப்போது அரங்கேறி வருகின்றது.இந் நிலைமை நீடிக்குமாயின் மிகப் பெரிய தொரு பொருளாதார முடக்கத்தை யாழ்ப்பாண வர்த்தகர்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கு மேலாக காசோலை மோசடிகள், நிதி மோசடிகள் என்ற பட்டியல் தொடர்பில் வழக்குப் பதிவுகளும் தாராளமாகும்.எனவே எங்கள் மண்ணில் வர்த்தகத் தொழில் முயற்சியில் ஈடுபட்டு இடர்படுகின்றவர்களை காப் பாற்றுவதில் புத்திஜீவிகள், தொழில் வழிகாட்டு நர்கள் களத்தில் இறங்க வேண்டும்.வர் த்தகத்தொழில் முயற்சியயன்றால் இப்படித்தான் என்று ஒரு வளையத்தை வளைத்து கொண்டு அதற்குள் நின்று மீள முடியாதவர்களை தொழில் மாற்றம் என்பதனூடாக மீட்டெடுக்க வேண்டும்.
வர்த்தக முயற்சிகளுக்குள் இருக்கக் கூடிய பல்வகைமைகளை இனங்காட்டிக்கொடுத்தல் மூலதனப்பற்றாக்குறை நில வுமிடத்து கூட்டு முயற்சிகளுக்கான ஏற்பாடுகளை உருவாக்கி கொடுத்தல், உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட ஊக்கு வித் தல் என்ற பணிகளை விரைந்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். இதைசெய்யத்தவறினால் யாழ்ப்பாண வர்த்தக முயற்சிகள் படுதோல்வி காண, தென்பகுதி வர்த்தகம் ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் தட்டி நிற்கும்.இதோ! நாங்கள் முகாமைத்துவ பயிலுநர்கள். எங்களிடம் தரமான பொருட்கள்... இந்த நிலைமைக்கு நாமும் ஈடுகொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்