நயீனாதீவு – குறிகட்டுவானுக்கிடையில் 'பெரி'யில் போக்குவரத்து

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குறிகட்டுவான் நயினாதீவுக்கு இடையில் வாகனங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக 'பாதை' அல்லது 'பெரி' என்று அழைக்கப்படும் மிதக்கும் உருவாக்கப்பட்டு வருகின்றது.

உருவாக்கப்பட்ட பெரியின் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் மிதக்க விட்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஏற்கனவே மூதூரில் பாவனை செய்யப்பட்ட மேற்படி பெரியானது, குறிகட்டுவான் கொண்டு வரப்பட்டு, தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சில பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் மிதிக்க விடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

மேற்படி பெரியானது முழுமையாக உருப்பெற்ற பின் குறிகட்டுவானிலிருந்து நயினாதீவு ஒரே நேரத்தில் மூன்று பேரூந்துகள் அல்லது அதற்கு இணையான பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என வீதி அதிகார சபை தெரிவித்துள்ளது.