நாவற்குழி பாலத்திற்கு வேகத்தடை

நாவற்குழி பாலத்தின் இருமருங்கிலும் வேகத்தடை தற்போது போடப்பட்டுள்ளது. 

அண்மைய காலத்தில் நாவற்குழி பாலத்தில் அதிகரித்து வந்த வீதி விபத்துக்கள் காரணமாக அவற்றைத் தடுக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனினும் பாலத்தில் விசேட பூச்சு கலவை அண்மையில் கொழும்பில் இருந்து எடுத்து வரப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இது அமைக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஏற்கனவெ போடப்பட்டிருந்த வேகத்தடை சேதமடைந்திருந்த நிலையில் விபத்து அதிகரிப்பினால் தற்போது புதிய வேகத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.