யாழ். பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் காவலாளி மீது தாக்குதல்

யாழ். பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் காவலாளி மீது தாக்குதல்

யாழ். பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் காவலாளி மீது  ஐவர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை  (18) இரவு  அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பாடசாலையில் வழமைபோன்று கடமையில் ஈடுபட்டிருந்த இவரை தாக்கிவிட்டு ஐவரும் தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர். 
இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கும்; நண்பர்களுக்கும் கையடக்கத்தொலைபேசி மூலம் இக்காவலாளி அறிவித்த நிலையில், அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய ஐவரில் நால்வரை  தனக்கு தெரியுமெனவும் இருப்பினும், அவர்களுடன் தனக்கு எவ்வித முரண்பாடும் இல்லையெனவும்  காவலாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாகவும்  பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.