பல்வேறு திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நபர் கைது

பல்வேறு திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நபர் கைது

மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற 15 இற்கும் மேற்பட்ட திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஆனைக்கோட்டையினைச் சேர்ந்த இளைஞன் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸாரினாலேயே மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியில் அண்மைக்காலமாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் பரவலாகத் திருட்டுக்கள் இடம்பெற்றன. இது தொடர்பாக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையிலே மேற்படி இளைஞன் ஆனைக்கோட்டையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.