பஸ்ஸில் நசுங்குண்டு சுக்கு நூறாகிய முச்சக்கரவண்டியும் 6 உயிர்களும்!

கொழும்பு செல்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ், அதற்கு முன்னாள் சென்ற முச்சக்கரவண்டியை மோதி அடித்து, அதன் மேல் ஏறி சுக்கு நூறாக்கியுள்ளது. இதனால் குறித்த முச்சக்கரவண்டி முற்றாக நசுங்கி தூளாகியுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்ப சகோதரிகளான எம்.எச்.ஜெமினா (வயது 35), எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.றிஹானா (26), இவரது புதல்வர்களான அக்தாஸ் அஹமட் (ஒன்னரை வயது), அம்ஹர் அஹமட் (இரண்டரை வயது, மற்றும் சாரதி எம்.இஸதீன் (50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.