பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நடிகை புஷ்ரா (18) அசீட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார்.
நாடகம் மற்றும் சில பாஷ்டோ மொழி பாகிஸ்தான் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை புஷ்ரா
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா நகரில் இவர் வசித்து வரும் இவர், இன்று அதிகாலை வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, மதில் சுவரை தாண்டி குதித்து வந்த மர்ம நபர் புஷ்ராவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பியோடி விட்டான்.
இதனால் பெஷாவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது முகம் மற்றும் கழுத்து பகுதியில் 33 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
நடிகை புஷ்ராவின் முன்னாள் காதலன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.