பாதுகாப்புப் படைகளின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .
இவர் தனது யாழ் . விஜயத்தின் பொழுது கொடிகாம் வரணிப் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களை விடுவித்து அப்பகுதியை பொதுமக்களிடம் கையளிப்பார் என பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது .
இந்த வரணி படைமுகாம் சுமார் மூன்று சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான ஒருபடை முகாமாகும் .
இப் படை முகாமிற்குள் பொதுமக்களின் வீடுகளும் காணிகளும் உள்ளடக்கப்பட்டிருந்ததால் யுத்தம் முடிந்தபின்னர் இதனை விடுவிப்பதற்கு பெரும் முயற்சிகளை எடுத்திருந்தனர் .
தற்பொழுது இப்படைமுகாம் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை யாழுக்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான கோபால் பலாலியில் இராணுவத் தளபதிகளுடன் உரையாடிய பின்னர் யாழில் முகாமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .