பிலிப்பைன்ஸ் பிரஜையின் சடலம் துறைமுகத்திலிருந்து மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ள தாய்வான் நாட்டு கப்பலிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேபின் மெகலோன்ஸ் பொனியுஸ் (வயது 37) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக பண்டாரநாயக்க பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ள தாய்வான் நாட்டுக்குச் சொந்தமாக கப்பலில் இருந்த சேவையாளர்கள் இடையே இன்று இடம்பெற்ற கைகலப்பின் போதே அவர் கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் தெரிவித்தனர்.

இந்த கைகலப்புடன்  தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிலிபைன்ஸ் பிரஜைகள் அறுவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.