புத்தளம் - பாலாவியில் ஒருவர் சுட்டுக்கொலை

புத்தளம் - பாலாவி - நாகவில்லு பகுதியில் இன்று (19) பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வான் ஒன்றில் வந்த நபர்கள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலை இடம்பெற்ற வேளை குறித்த பகுதியில் கடும் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.