பேராதனை நகரில் உள்ள சில்லரை வர்த்தக நிலையமொன்றில் இன்று (18ம் திகதி) அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற தீ விபத்தில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பொலிஸார் மற்றும் கண்டி தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிறிய பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.