பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் திடீர் மரணம்

வாத்துவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (16) அதிகாலை திடீரென சகவீனம் உற்ற நிலையில் பாணந்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபர் மின்னேரியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.