மாதகல் கோணாவளைப் பகுதிக்கு மின்விநியோகத் திட்டம் ஆரம்பம்

வலிகாமம் தென்.மேற்கு மாதகல் கிழக்குப் பகுதிக்கான மின்சார விநியோகத் திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாதகல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் குறித்த மின்விநியோக திட்டத்தினை இன்றைய தினம் (11) ஆரம்பித்து வைத்தார். 

மாதகல் கிழக்கு கோணாவளை பகுதிக்கு இம்மின்விநியோக திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் ஊடாக அங்குள்ள 75 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

மாதகல் பகுதிக்கு முதற்தடவையாக மின்விநியோக திட்டம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் மின்விநியோகத் திட்டத்தை கிடைக்கப் பெறச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுக்கும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

முன்பதாக நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்விளக்குகளுக்கான அழுத்திகளை இருவரும்; உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். 

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள், யாழ் மாவட்டத்திலே மக்கள் மீள்குடியேறிய பிரதேசங்களில் மாதகல் மற்றும் மாதகல் மேற்கு பகுதிகளில் மடடுமே அதிகளவானவர்களுக்கு வீட்டுத் திட்டத்தினை வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இருப்பினும் இன்னும் சிலருக்கு வீட்டுத் திட்டங்கள் கிடைக்கவில்லை என நாம் அறிகின்றோம். எனவே எதிர்காலத்தில் அவர்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். இதேவேளை வீட்டுத் திட்டப் பணிகள் நிறைவடையும் போது இப்பகுதிக்கு மின்சாரமும் வழங்கப்படும் என்று நாம் அன்று வழங்கிய உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்காக சுமார் 190 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இந்தப் பகுதி மக்கள் மின்சாரத்தை அனுபவிக்கின்ற சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர் எனகுறிப்பிட்டபாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.

இன்னும் தேவைகள் உள்ள சமூகமாகவேநாம் இருக்கிறோம். அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர் ஆகவே, மக்களது தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டுமானால் அதற்கான பலத்தை மக்கள் எமக்குத் தரவேண்டும் அப்போதுதான் எமது சமூகம் அனைத்து தேவைகளையும்  நிறைவு செய்த சமூகமாக மாற்றமடையும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு எமது மக்கள் சந்தர்ப்பங்களைசரியாகப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே எமது சமூகத்தின் எதிர்காலசந்ததியினருக்கும் ஒளிமயமான வாழ்க்கையை எம்மால் பெற்றுதர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் 

மாதகல் கிழக்கு லூர்த்து அன்னை ஆலய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மாதகல் கிராமிய அமைப்பின் தலைவர் சுவேந்திரராசா, உறுப்பினர் பார்த்தீபன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உரைநிகழ்த்தினர். 

இதனிடையே மாதகல் மாத்துறை சந்தியில் கூடிநின்றவர்களுடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார். 

இதன்போது வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளர் குணசீலன், பிராந்திய மின் பொறியியலாளர் ஞானகணேசன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன், பொறியியலாளர்களான அருள்நாதன், கோசல மற்றும் ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஈ.பி.டி.பியின் மானிப்பாய் இணைப்பாளர் ஜீவா ஆகியோரும் உடனிருந்தனர்.